Welcome
Welcome

       Sri Kamakshi Peeta Vasini

 

தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள் நிரம்ப தபஸ் பண்ணி எல்லையில்லாத பலம் பெற்றிருந்தார்கள். சாஷhத் பரமேஸ்வர தேஜஸிலிருந்து உண்டான குமாரன்தான் தங்களை வதம் செய்ய முடியும் என்று வரம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பரமேஸ்வரனோ பரம ஞான மூர்த்தியாக எந்தக் காரியமும் இல்லாமல் ஆத்மானந்தத்தில் முழுகிக்கொண்டு தஷpணாமூர்த்தியாக உட்கார்ந்து விட்டார்.

இவரை எப்படிப் புத்திரோத்பத்தி செய்ய வைப்பது? அசுரர்களால் ஹிம்சிக்கப்பட்ட தேவர்களுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. அப்போது ஹிமய பர்வத ராஜனுக்குப் புத்திரியாகப் பிறந்த பார்வதிதேவி இந்தத் தஷpணாமூர்த்தியை கைங்கரியம் செய்து வந்தார். காமத்துக்கு அதிதேவதையான மன்மதன், பார்வதியிடம் பரமேஸ்வரனின் மனசைத் திருப்பிவிட்டால் பிறகு சிவகுமார ஜனனம் ஏற்படும் என்று தேவர்கள் எண்ணினார்கள். மன்மதனைப் பரமேஸ்வரனிடம் உன்சக்தியைக் காட்டு என்று ஏவி விட்டார்கள்.

 

 

லோகம் முழுவதும் சுவாதீனம் பண்ணிக்கொள்ளுகின்ற ஆற்றலை மன்மதனுக்கு தந்ததே பரமேஸ்வர சக்திதான், அந்தப் பரமேஸ்வரனிடம் பக்தியோடு போய்த்தன் சக்தியை அவரிடம் அர்ப்பணம் பண்ணியிருந்தாலே போதும், கருணா மூர்த்தியாகிய அவர் காரியத்தை முடித்துத் தந்திருப்பார். ஆனால் அந்தச் சமர்ப்பண புத்தியில்லாமல் அகங்காரத்தோடு போய் அவர்மேல் மலர் அம்புகளை விட்டதால் அவரது அக்கினி மயமான நெற்றிக் கண் பார்வையில் எரிந்து சாம்பலானான். மன்மதனின் பத்தினியாகிய ரதி புலம்பினாள். பார்வதிதேவி அவளுக்கு அபயம் தந்து அவள் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும்படியாக அனுக்கிரஹித்தாள். மன்மதனைப் பார்த்து 'நான்தான் உனக்கு இந்த வில்லையும், அம்பையும் தந்து சகல ஜீவராசிகளையும் காம வசப்படுத்தும்படி அனுக்கிரகம் செய்தேன். ஆனால் எனக்கும் மேலதிகாரியிடம் உன் கைவரிசையை காட்டி விட்டாய். சக்தியைக்காட்டிப் பிரயோஜனமில்லை பக்திக்குத்தான் அவர் வசப்படுவார். அவரிடம் எப்படிக் காரியம் நடத்திக் கொள்வது என்று இப்போ பார்' என்று கூறிய அம்பாள் மன்மதனிடமிருந்து கரும்புவில்லையும், புஷ;ப பாணங்களையும் தன் கையிலெடுத்துக் கொண்டாள். ஈஸ்வரனிடத்திலே போய் நின்றாள் கரும்புவில்லையும், மலரம்புகளையும் ஈஸ்வரன் முன் போட்டு அன்பு மயமாகப்பார்த்து நமஸ்காரம் செய்தபோது காமனை எரித்த அதே ஈஸ்வரன் அம்பாளைப் பிரேமையுடன் பார்த்து 'காமாஷp' என்று அழைத்தார்.

பிறகு பார்வதி கல்யாணம் நடந்தது. முருகக்கடவுளின் உற்பத்தி நடைபெற்று தாரகாசுரன் முதலான அசுரர்களின் சம்ஹாரம் நடைபெற்றது.

இவைகளின் பின்னர் மன்மதன் அம்பாளிடம் சென்று 'தாயே நான் ஆணவத்துடன் ஈஸ்வரனை நெருங்கியதற்குத் தண்டனையாக பேரெழில் பொங்கும் என் உடலைiயே அவர் பொசுக்கிவிட்டார். ஆனால் என் உயிரே பொசுங்காமல் நீதான் ரஷpத்து என்னை ஆவியாக வைத்திருக்கிறாய். அது மாத்திரமன்று உன்எல்லையற்ற கருணையினால் ரதிக்கு இரங்கி அவள் கண்களுக்கு மட்டும் என் உருவம் தெரியுமாறு தயை கூர்ந்தாய். இதெல்லாவற்றிற்கும் மேலாக அடியேன் வைத்திருந்த கரும்புவில்லையும் மலரம்புகளையும் உன் அபய வரத திருக்கரங்களிலே தரித்திருக்கின்றாய். என்னைப் போல் ஆணவமாக இல்லாமல் விநய உருவாய் நின்று பிரேமை பொங்க பரமேஸ்வரனைப் பார்த்ததால் என் ஆணவம் சாதிக்காதததை உன் அன்பு சாதித்து, என்னை எரித்த அதே பரமன் பின்னர் சிரித்து இதழ் விரிந்து 'காமாஷp' என்று உன்னை அழைத்தார். பிறகு உன்னைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு விட்டார். தன்னுடைய சரீரத்தில் ஓர் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரராகி விட்டார், முருகப்பெருமானையும் பெற்று சோமாஸ்கந்தர் என்று வேறு திருநாமம் பெற்றிருக்கிறார். என்னை அவர் பஸ்பமாக்கிவிட்டாலும் என் நோக்கம் பஸ்பமாகிவிடவில்லை. குமரோத்பத்தி நடந்தது அக்குமரப் பெருமான் சூரனை சம்ஹரித்து அமரர்களுக்கு பழைய பெருமைகளையும், பதவிகளையும் மீட்டுத்தந்து விட்டார். கடைசியில் தேவகாரியத்துக்கு என்னையே பலியிட்டுக்கொண்ட நான் மட்டும் உலக பழிப்புக்கும் ஆளாகி என் அழகு சரீரத்தையும் இழந்து நிற்கின்றேன்' என்றார்.

அம்பிகைக்கு அருள் வெறி வந்துவிட்டார் கேட்க வேண்டுமா? உடனே கைலாசத்தில் பரமன் அன்பு செய்து கொண்டிருந்த பரதேவி ஜீவ கலைகளை எல்லாம் இழந்து ஜடமாகிவிட்டார்

 

The Goddess Kamakshi prevails in the form of Shakti. There are 51 Shakti Peetas across the country. The goddess residing place in Kanchi is called as “Nabisthana Ottiyana Peetam”. The Goddess is called as “Sri Kamakshi. The word is derived from the heritage “Ka” means Goddess Saraswati (God of Education), “Ma” means Goddess Lakshmi (God of Wealth), “Akshi” means Eye. The name as a whole refers as the god lives in Kanchi with Goddess Saraswati and Goddess Lakshmi as her both eyes. The Lalitha Sahasranama poem is an idle example for the goddess power.

 
     Sri Kamakshi Ampal Temple Gallery
 
 
ஸ்ரீ காமாக்‌ஷி அம்பாள் தேவஸ்தான வருடாந்த வஸந்த உற்சவ விஞ்ஞாமனம் 2011
 
 
      Contact Us

 

SRI KANCHI KAMAKSHI AMMAN DEVASTHANAM"
Mylampavely, Ramnagar,

Batticaloa,

Sri Lanka.

Telephone +94 065 4923940  
Mobile +94 772304067
E Mail 
info@srikanchikamakshi.com

 

 

Bank AC No:

HNB – Trinco Road, Chenkalady, Batticaloa.

CHENKALADY BRANCH
SAVING A/C NO - 135020006371.

 

 
 
 All Rights reserved by Sri Kamakshi Ampal Thevasthanam     Site Design by Speed IT net